4 ம் வட்டார கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான புதிய சிகிச்சை நிலையம் சவீவபுரத்தில் வசதிகள் குறைந்த பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த தாய் சேய் சிகிச்சை நிலையம் நகர பிதா K.A.பாயிஸ் அவர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக கொச்சுமடுதரவை அங்கவீனர் வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
இப்புதிய நிலையத்தில் மருத்துவ தாதிகளுக்கான காரியாலயம், சிகிச்சை அறை மற்றும் தளபாடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு தாய்மார்களும் பிள்ளைகளும் வசதியாக அமர்திருந்து சிகிச்சைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


