PuttalamOnline

கலாம் காதிரின் கவிதை: தனிமை

| 1 Comment

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பதவியெனும் வரம்பெறவே தவத்தினிலும்
கசிந்துருகி நடுநிசியில் எழுந்துநின்று
கண்ணியமாய்த் தொழுகின்ற வேளையிலும்


சோதனைகள் துயரங்கள் துன்பங்கள்
சோதிக்க வரிசையாய் வந்துநின்று
போதனைகள் கூறிநிற்கும் வேளையிலும்
புகலிடமாய்த் தெரிகின்றத் தனிமையினை


இனிமையென ஏற்றுவிடும் உள்ளந்தான்
இவ்வுலகின் ஏற்றமிகு ஞானிகளின்
தனிமையாம் தவமெனும் பாடமாகும்
தவறுகளைத் தடுக்கின்ற கேடயமாம்


குழந்தையும் கருவாக உயிரணுவும்
கர்ப்பத்தைத் தனிமையில் சந்திக்கும்
அழகுதமிழ்க் கவிதைகள் உருவாக
அறிவுணர்வும் தனிமையில் சிந்திக்கும்


பேறுபெற்ற புலவர்கள் கூட்டத்தில்
பெருந்திரளாம் வினாக்கணைகள் வீசுமவர்
நூறுவினா ஒன்றாகச் சந்தித்து
நோகாமல் விடைதருவர் தனித்துநின்று!


தனிமையென்றால் ஊக்கத்தை வழங்குகின்றத்
தன்னம்பிக் கையென்றே பொருளாக்கு;
துணிவைத்தான் தருகின்ற சூட்சமும்
தனிமையில் மட்டும்தான் உண்டாகும்!

One Comment

  1. தனிமையின் பொழுதுகள்; படைத்தவனுக்கே சமர்ப்பணம்!!!

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)