நேற்றிரவு புத்தளம் பெரியப்பள்ளிவாயலில் SOCIAL MEDIA சம்பந்தமான ஒரு விழிப்புணர்வு நிகழ்வொன்று சகோ. எம். ஹிஸாம் மரைக்கார் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வு இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் பெரியப்பள்ளி நிர்வாகத்தினரும் ஊடகவியாலாளர்களும் இளைஞர்களும் மற்றும் ஊர் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சகோ. எம். ஹிஸாம் மரைக்கார் தெரிவிக்கையில் சமுக வலைத்தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் புத்தள மக்கள் சமுக வலைத்தளங்களை பயன்படுத்தவது குறைவு எனவும் தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்டோர் இந்நிகழ்வு மிகவும் பிரயோசனமாக இருந்ததாகவும் இது போன்ற நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

