களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை நகரில் எழுவிலை எனும் எழில் கொஞ்சும் கிராமத்திலே ஊரின் கண்ணாய் அமைந்திருக்கும் அலவிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு 08 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய 100% சித்தியை அடைந்துள்ளது மகிழ்ச்சித்தக்க விடயமாகும். இவர்களுள்
எப். சுமானா சியாட் 3 (A) சித்தி – பரீட்சை எண் – 5716543
எப். சும்லா சுல்பிக் 3 (A) சித்தி – பரீட்சை எண் – 5716535
எப். சஹீகா சாமில் 3 (A) சித்தி – பரீட்சை எண் – 5716551
சித்தியையும் பெற்றுள்ளனர். அத்தோடு எஸ். அம்லா சினீர் மற்றும் எப். பர்ஹானா நியாஸ் ஆகியோர் A சித்தியுடன் இரண்டு B சித்திகளையும் பெற்றுள்ளனர். ஏனைய மாணவர்கள் எம். நாஜிஹ் நூர்தீன், எப். ரஹ்மா மசூர், எப். மபாஸா முயீஸ் ஆகிய மாணவர்களும் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
இத்தனை வெற்றிக்கும் பின்னனியில் வல்ல நாயனின் உதவியால் பலர் இருந்தனர். அந்த வகையில் க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கு அனுமதி பெற்றுத் தந்த முன்னாள் அதிபர் அல்-ஹாஜ். எ.எஸ்.எம். புஹாரி அவர்களுக்கும், 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி 08 மாணவர்களுடன் க.பொ.த உயர்தர வகப்புக்களை ஆரம்பித்து மாணவர்களை ஊக்கமூட்டிய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். சல்மான் அவர்களுக்கும், மாணவர்களை குறுகிய காலம் வழி நடத்திய இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர். ஏ.ஆர். ரம்ஸி அவர்களுக்கும், மாணவர்களை எந்நேரமும் கைவிடமால் எந்த சஞ்சலத்தின் போதும் உறுதுணையாய் நின்ற உளவனத் துணையாளரும் தற்போதைய அதிபருமான எஸ். எச். முத்தலிப் அவர்களுக்கும், வகுப்பின் 08 மாணவர்களையும் தன் பிள்ளையாய் கருதி செயற்பட்ட வகுப்பாசிரியரும் மற்றும் அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியருமான ஏ. எப். பஸ்மில்கான் அவர்களுக்கும், இஸ்லாமிய நாகரீக பட ஆசிரியர் எம்.யூ.எம். நௌபீஸ் அவர்களுக்கும், புவியியல் பாட ஆசிரியை எஸ். என். அஸ்மியா ரஜீன் அவர்களக்கும், எந்நேரமும் மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்த பாடசாலை ஆசிரியர் குழாமிற்கும், அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும், பிரத்தியோக வகுப்புக்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளத்தினருக்கும் ஏனைய எல்லா விதங்களிலும் உதவிய அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.