PuttalamOnline
ஆக்கங்கள்
images

பள்ளிப்பருவம்

[M.A.B. ஆயிஷா ஹனான்] ————————————————- கல்லூரியின் போதனைகள் கற்றதில்லை என்றும் எங்கும் கற்றலின் ஆர்வம் கண்டதில்லை அன்றும் இன்றும்   ஒன்றினைந்தது கல்வி ஒழுக்கத்துடன் – ஒட்டியதாய் ஒற்றுமையாய் கற்க ஒரு சுழி போட்டது.   உயர்த்திச்சென்றது உயர்கல்வி வரை உருவாக்கியது எதிர்காலத்தை உரிமையாய் நின்றது உயிர் வாழ உதவியது.   ஆளுமைத் தொடர்புகள் ஆதரவாய் … Continue reading

images

பணம் பேசவில்லை! எம்.எச்.எம்.அஷ்ரப்

(O.F.Irfana) கல்முனையில் 1969 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வெளிடப்பட்டுவந்த அல்-அரப் என்ற முஸ்லிம் கல்வி மலரில்  ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 44 வருடங்களுக்கு முன் தனது  21 ம் வயதில் எழுதிய “பணம் பேசவில்லை” என்ற சிறுகதை அன்றைய சமூக நிலையை எடுத்துக் காட்டுகின்றது. (இப்பழைமைமிக்க … Continue reading

th

தாய் என்ற பாத்திரம்

தாயின் துயர அனுபவமும்  மனிதர்களின் விளைநிலமான “தாய்”என்பதன் கனமுமும் நிகரற்ற தியாகமும் ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தையில் அனுபவித்து கொள்கின்றான்.  மாற்றீடு அற்ற பாலை ஊட்டியது போல                                        அன்பையும் ஊட்டிய தாய் என்ற பாத்திரம் எப்படியெல்லாம் வலிகொண்டிருக்கும் என்பதை எண்ணும் கண்கள் பணிக்கின்றது  எத்தனையோ இரவுகள் தூக்கம் தொலைந்து போயிருக்கிறது. நாம் செழித்து வளர உடல் களைத்து … Continue reading

index

வட்டக்கண்டலில் மின்னிய வைரக்கல்

எம் பாடசாலை பிரசவித்த நிறைமாத முத்து ஹம்ஸியா எனும் புகழ்மிகு சொத்து  காரிருள் சூழ்ந்திருந்த – எம் கல்வி வரலாற்றுத் தெருவை முதலில் முத்தமிட்ட நம்பிக்கை நட்சத்திரம் – நீ  வெறிச்சோடிக் கிடக்கும் – எம் பெறுபேற்றுப் பக்கங்களில் முத்துக்களாய் 8 A க்களை குவித்த குங்குமக் குமரி – நீ  … Continue reading

th

உயர்வுக்கு வழிவகுக்கும் எங்கள் பாடசாலை

காலம் கிழித்துப் போட்ட தேதிகளை சிரமப்பட்டு சேகரித்துப் பார்க்கிறேன் ஏழு தசாப்தங்களை கடந்து நிற்கின்றது எங்கள் பாடசாலை! அம்பலம் எனும் கிராமத்தில் குறும்பாடசாலையாக உதயமெடுத்து – இன்று இஸ்மாயில்புரத்தில் இமயமாய் நிமிர்ந்து நிற்பது எங்கள் பாடசாலை! மாணாக்கர் ஐம்பதுடன் மலர்ந்த கல்வியகம் இன்று தொள்ளாயிரத்து பத்தொன்பதையும் அதனுள்ளே ஈர்த்தெடுத்துள்ளது கடந்த காலம் ஈர்த்தெடுத்த பல ஆயிரம் … Continue reading

angelopoem

கற்றுத் தீரவில்லை

சமர்ப்பணம் அன்டன் செல்வகுமார் அவர்களுக்கு கல்வி எனும் ஒரு பெண்மேல் காதல் கொண்டு அவள் பின்னே அல்லும் பகலும் அலைகின்றேன் ஆனால் முடியவில்லை அன்னை வயிற்றில் கருவாக அடங்கிக் கிடந்த நாள் முதலாய் என்னைத் தொடரும் பெரும் காதல் என் உள்ளம் தணியாப் பேரேக்கம்   அள்ளக் குறையா மண்ணின் மேல் அப்பா கையைப் பிடித் … Continue reading

index

இஸ்லாத்தை ஆட்டம் காண வைத்தால்.. ஜெனீவாவில் அடங்குமா அமெரிக்கா !

முஸ்லிம் தமிழ் தேசியம் முகவரியே பேரின அகராதியின் முதன்மை பயங்கரவாதம் முத்திரையிட்ட முகவரி முடக்கி விட்டார்களாம் முண்ணணி இனப்போரை முடுக்கி விட்டார்கள் முஸ்லிம் மதப் போரை அடக்கி விட்டார்களாம் அதீத பயங்கரவாதத்தை அடுக்கி விட்டார்கள் அநியாய அரங்கேற்றங்களை அடைகாக்க வைத்தார்கள் அரசாசாமிகளை அடக்க மறுத்தானாம் அசாத் அநியாய எதிர்ப்பை எட்டிய திசைகளுக்கு எத்தி வைத்தானாம் ;எம்மவர் … Continue reading

as

அசாத்சாலி நீ! அழியாத ஆழி! எங்களுக்கு வேலி!

A.H.M.Mawjood – Kandy இஸ்லாமிய நிந்தனைகள்,இட்டுக்கட்டல்கள், முஸ்லிம்களுடனான முறுகல்கள், துவேஷத் தூண்டல்கள், மனிதாபிமான முரண்பாடுகள், முறைகேடான முன்மொழிவுகள், ஆதாரமற்ற அபாண்டங்கள், விழுமிய விதண்டாவாதங்கள், வீணான விளக்கங்கள், கலாச்சார கேளிக்கைகள்,குர்ஆனியக் குதர்க்கங்கள், நபிவழியில் நையாண்டிகள், ஒற்றுமை ஓட்டைகள்,சமுதாய சீரழிப்புகள், பொருளாதாரப் பாதகங்கள், தலைமைத்துவ துண்டாடல்கள்,அநியாய நியாயங்கள், போன்ற இத்தியாதி கோணங்களில் ஊடுருவி இஸ்லாத்தை வேரறுக்க கபடக் குரோத … Continue reading

Logo.JPEG

புதிய ஒரு ஊடக பலமாய் திகழ பிரார்த்திப்போம்… அபூ முகன்னா

அரசியல் ஆளுமை அடக்க நினைத்த போதும் அடங்காமல் ஓடிய Puttalam Online சமூக விரிவுகள் சிக்கலாக்கிய போதும் சிதறுண்டு போகாத Puttalam Online பொருளாதார வரவுகள் மங்கிப்போன போதும் மனம் தளராத Puttalam Online ஆசி வார்த்தைகள் வரண்டு போன போதும் வனப்போடு வெளி வந்த Puttalam Online தேசம் / சர்வதேசம் என செய்திகள் … Continue reading

images

வரலாற்றுக்கு கிடைத்த பரிசு (ஹப்ஸாவின் சிறுகதை)

டியுசன் வகுப்புக்குச் சென்று வந்த அஸ்ஸா தனது சகோதரி computer யில் puttalam online யில் புத்தளம் வரலாற்றின் வினா விடைக்கான பரிசு பெருவோரின் பட்டியலை வாசித்துக் கொண்டு இருந்தாள். அதில் அஸ்ஸாவின் பெயரும் காணப்பட்டது. துள்ளிக்குதித்தவாரு தாயிடம் வேகமாக ஓடினால். Continue reading

524953_143397085836216_1472622596_n

அடி நிர்வாணம் காட்ட முனைபவளே!

சகோதரி அஷ்ரபா நூர்தீன் ‘இலங்கை நெற்’றில் எழுதியிருந்த ‘ஒரு முஸ்லிம் பெண்ணின் வாக்குறுதி’ கவிதைக்கான பதில் கவிதை! —————————————————————————-——– துச்சாதனர்கள் இன்று உப்பரிகையில் நின்று துச்சமாய் பெண்டிரின் நிர்வாணம் கண்டிட உச்சாணி நிற்கின்றார் அதுகண்டு -பெண்ணே உன் நிர்வாணம் காட்டிட நீமுனைவது தகுமோ? தாய்க்கும் தன்னொடு பிறந்த தமியளுக்கும் தரமேதன்ற றியா ஈனர்களின் குடல்கொய்து நாயிழிசனம் … Continue reading

halaalfinal

2013 மார்ச் 11

2013 மார்ச் 11, முஸ்லிம்களின் வாழ்வில் – ஒரு முக்கிய நாள் கருப்பு நாள், ஹலாலை – ஹலாலாக்கி இலகுவாக்கி தருவார்கள் என்று தன் சமூக அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து நிராசையான நாள், கடந்து போன ஜெனிவாவின் செஞ்சோற்றுக் கடனுக்கு – நன்றியாக எமது நெஞ்சில் நஞ்சை விதைத்த நாள், “என்னவொரு சாதுரியமான முடிவு” தலைப்பைப் பார்த்தவுடன் – என் தலையில் இடிவிழுந்தது – என் … Continue reading

ACJU_Logo_Color

கட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம் விமர்சிப்பதும் அவசியமே!

  கட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம் விமர்சிப்பதும் அவசியமே! காரணம்.. நாங்கள் மந்தைகளல்ல – உமரை நேசிக்கும் முஸ்லிம்கள்! ஊறுகாயாய் மாறிவிட்டது இலங்கை முஸ்லிம் சமூகமா அல்லது தலைகளா ??? தேவை என்றால் தொட்டுக் கொள்வதற்கும் இல்லை என்றால் தூக்கி எறிவதற்கும் நாம் என்ன பகடைக் காய்களா ??? காய்கள் கனியாகுமாம்! ஆனால் கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றதே!!! கழித்தல் நின்றுவிடுமோ … Continue reading

Muslim-woman-254x300[1]

தென்றல் கமாலின் கவிதை: விதவை

விதவை [box type="info"]பெரும்பாலான பெண்களை நான் நரகில் கண்டேன். நீங்கள் அதிகமாக சபிப்பவர்களாகவும் கணவருக்கு நன்றி பாராட்டதவர்களாகவும் இருக்கிறீர்கள் ( நபி மொழி) குறிப்பு சமீபத்தில் மரணித்த என் நண்பனின் மனைவியைப் பற்றிய எண்ணம் எழுந்தது. பொதுவாக எல்லா வீடுகளின் நடக்கும் சில நிகழ்வுகளை மனதில் கொண்டு ………எத்தனையோ மனைவியர் தமது கணவரின் சில இயலாமைகளைக் … Continue reading

mother

அஞ்சுவின் கவிதை: பெண்னே!

சமர்ப்பணம் என் தாய்க்கு   பெண்னே! தந்தையாய் தோள் கொடுக்கும் தோழியாய் காதலியாய்         பெண்னே! ஈன்றதாயாய் இளம்பிறை என்னை முழுநிலவாய் வடித்தாய்         பெண்னே! படைத்தாய் சாதம் எனக்கு சரித்திரமாய் எழுந்திடவைத்தாய்     பெண்னே! நீ சுமந்தாய் பாரச்சுமை என்னை பாமாலையாய் பூமாலையாய்        பெண்னே! தாயிடம்சேயாய் உன்  தலைவனிடம் பாயாய் … Continue reading

tv

மாறிவரும் பொழுது போக்குகள்

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்] காலம் வேக வேகமாக நகர்ந்து கொண்டு செல்கின்றது. அதை போல எமது செயற்பாடுகளும் அதை விட வேகமாகவும் காலத்திற்கேற்பவும் மாறி விடுகின்றது. நம்முடைய பொழுதுபோக்குகளும் அப்படியே.. மாற்றங்களுக்கு உள்ளாகின்றது. ஒண்ட வந்த பிடறி ஊர் பிடறியை மிதித்ததாம் அந்த கதையாக போயுள்ளது இப் பொழுதுபோக்குகளின் நிலைமை. நான் அறிந்தவரை … Continue reading

_X8D0139[1]

கவிதை: இறப்பு நேரினும் சரித்திர விதைகளாய் புதைக்கபடுவோம்

எந்த மதத்தின் மீதான பற்றும்  வெறித்தனமாய் கிளர்ந்தெளுவதில்லை. காவியாறு கரை புரண்டு வந்தாலும் ஏகத்துவத்தின் பசுமை அழிந்து விடப்போவதில்லை. ஒரு கூட்டத்தின் கட்டுக்கடங்காத இச்சையும்,இனிமையற்ற வாழ்க்கையும் இஸ்லாத்தின் மீது    காழ்ப்புணர்வாய் மாறியது. வீர வேஷத்தால் விரட்ட நினைப்பது பூனை புலியாக நினைப்பது போன்று பூனை எப்போது புலியானது நமது உதிரத்தில் உமரின் வீரமும் கலந்துதான் ஓடுகிறது. தத்துவத்தில் தோன்றும் … Continue reading

girl

அஞ்சுவின் கவிதை: புரட்சி

வானகத்தில் பட்சிகளுண்டு ஆனால் ஏழை பணக்காரன் என்ற கட்சிகள் இல்லை கானகத்தில் விலங்குகளுண்டு ஆனால் சாதி சமயமினம் என்ற குலங்கள் இல்லை அடிதடிகளை அதிகரித்து விட்டார்கள் ஆறறிவை கொண்டு இவர்கள் மனங்களை நிராகரித்து விட்டார்கள் அணுவைப் பிளந்து ஈனர்கள் இறைவா! உறவு மழையைப் பொழி இதய பூச்செடிகளிலே நனி மலரட்டும் புரிந்துணர்வு மலர்கள் பரவட்டும் ஒற்றுமை … Continue reading

puttalam

நம் ஊரைப் போல வருமா…

[வசீம் அக்ரம் – புத்தளம்] [box type="warning"]“எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே புத்தளம் போனாலும் புத்தியோடு போ” [/box] என்ற முதுமொழி உண்டு. இதன் அர்த்தத்தை பலர் பல்வேறு விதமாக கூறுவர். நாம் இப்படி கூறுவோமே.. புத்தளம் புத்திசாலிகள் வசிக்கும் ஊர், முட்டாள்கள் அங்கு போவாதிர்கள். யார் எதைசொன்னாலும் நம் ஊரைப் போல வருமா.. குறைந்த … Continue reading

brightness

கவிஞர் முபாரக்கின் கவிதை – போராளி

மனிதனாய் பிறந்த ஒர் சீவனின் போராட்டம் இருள் சூழ வாழ்வதை செவியுற்று உறங்குகையில் பனிமூட்டத்தில் விழைந்து எழுதுகோலோடு எழுந்த அவல கண்ணீராய் உறைந்த துளிதான் இலையில் படிந்த பனி எழுத்து காகிதத்தில் மிதக்கும் சோகக்கதை !   இவருக்காய் நீதி வீழ்ந்தாலும் நேயத்தில் வளரும் உண்மைகள் வெளியேறும் சாதனை போராளியென திகைத்து திகழும் வீர மறவனென பீரிட்டு  ……………. உலகத்திலெழும் !

lostlove

கவிஞர் முபாரக்கின் கவிதை – காதல் இத்திகாசம்!

காதல் இத்திகாசம்!   துவங்குமுன்னே இனிதாகும் கண்களுக்கு வரம் பிரிவு இயல்பாகும் உறவைவிட உணர்வுதான் பெரிதாகும் காதலுக்கு  கடமையாளர்களை உதாசினப்படுத்தும் !   காதலர்கள் பயணிக்கும் முடிவில்லாப்பாதை தோய்ந்து வாடி பிரிவோடு வதங்கி வாழ்கிறது !   வாழ்க்கையில் நீந்தத்தெரியா படகுகள் காதல் ஓட்டையினால் மூழ்கி தவிக்கிறது குடும்பத்தின் கண்ணீர் கதை மக்கள் பார்வையில் மிதக்கிறது  !  

Faith

கவிதை – பருவத்தில் ஈமானிய பயிர் செய்வோம்

இளமை என்பது மிகவும் சவால் நிறைந்தது அல்லாஹுவை அதிகம் நினைவுகூரவேண்டிய நிலை   ஆண் பெண் கலப்பு நிறுவனங்கள் பெரிய சோதனை ஈமானை உறுதி கொள்வதில் போராட்டம் நிறைந்தது இளமையானது பருவங்களை கொண்டு மரணம் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை மறுத்துவிடும்   கல்லூரி வாழ்க்கை பலவகை சிந்தனையின் உற்பத்தி நிலையம் தனிமையும் சுதந்திரமும் கலங்களால் வரையறையாவதால் அது … Continue reading

sorrow

கவிஞர் முபாரக்கின் கவிதை – வேதனை!

சாதனையாளர் எவரென்றறியாது ஏற்றிட்டொருவனை உயர்த்தியே ……. புகழாடுகிறது   தன் பிறப்பை மறந்து பெற்றிட்ட தாயை துறந்த மானுடம் இன்புற்றே கொண்டாடுகிறது தீவிர இரசிகனென்று   குடும்பம் மறந்த குடிமகன் குடியை இழந்தான் பொழுது போக்கிட்ட திரை விலகவில்லை   வறுமையில் வீழ்ந்த போக்கு இருளை நீக்கவில்லை வாழ்க்கையில் எரியாத விளக்கு   வளிமையிழந்து எரிகிறது குடும்ப சுமையோடு கலாச்சார சீரழிவில் … Continue reading