அமரர் கந்சாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணக்கர்கள் – ஆஸாத் ஸிராஸ்
“ஆசிரியர்களாகிய நாம் மரணித்தும் மாணவர்களின் உள்ளங்களில் வாழ்வோமா?? என்ற உணர்வு ஒவ்வொரு ஆசானிடத்திலும் இருக்க வேண்டும்”
அவசரமாக என்னுடைய வகுப்பு நன்பர் தளத்திலிருந்து தொடர்பு கொண்டார் அவரை காணவில்லை…. காணவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று, இறுதியாக அவர் விழுந்திருக்கிறார்….
எனது வாழ்வில் பல ஆசான்களை சந்தித்திருக்கிறேன்…..உண்மையிலேயே இவரை போன்ற கற்பித்தலை புனிதமாகக் கருதி அதனை ஒரு சேவையாக நினைத்து தன்னுடைய முழு மூச்சையும் அதற்காக வேண்டி அர்ப்பணித்துச் செயல்படக்கூடியவர்கள் மிகவும் சிலரே அந்த வகையில் ஆசிரியர் அவர்கள் எமக்கு மறவாத நினைவுகளை விட்டு விட்டுச்சென்றுள்ளார். அவரைப் பற்றி நிறைய விடயங்கள் சொல்வதற்கு இருந்தாலும் ஒரு விடயத்தை மாத்திரம் குறிப்பிடுகின்றேன்…..
அவரது ஊனா ஊனா ஊனா (உ+உ+உ) உரியம், உணவைக் கடத்தும், உயிர் உள்ளது இன்றும் மறக்க முடியவில்லை…. வகுப்பில் ப்ரொஜெக்டர் இல்லாவிட்டாலும் மினி பிரசன்டேஷன் ஓடும்…
அவரது வெளிச்சத்துக்கு வராத பல நல்ல பக்கங்களை நாம் அடையாளப்படுத்த வேண்டும். “மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு பிரயோசனமாக வாழக்கூடியவர்”, “ஆசிரியர்களாகிய நாம் மரணித்தும் மாணவர்களின் உள்ளங்களில் வாழ்வோமா?? என்ற உணர்வு ஒவ்வொரு ஆசானிடத்திலும் இருக்க வேண்டும்”