சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம்
[வசீம் அக்ரம்]சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வீதி ஊர்வலம் ஒன்று…
சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வீதி ஊர்வலம் ஒன்று 15-10-2013 நடைபெற்றது.
இவ்வூர்வலத்தில் கண்பார்வையற்ற சிறுவர்கள் முதற்கொண்டு வயோதிபர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பல பாடசாலைகளை சேர்ந்த மாணவமாணவிகளும் பங்கு பங்குபற்றியிருந்தனர். புத்தளம் பிரதேச செயலகத்திலிருந்து நீதிமன்ற வீதி, மற்றும் பிரதான வீதி ஊடாக இந்த ஊர்வலம் சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாக்கம்: வசீம் அக்ரம்
பட உதவி: பர்ஹான்
இவர்களாவது பார்வையற்றவர்கள். நியாயமோ, அநியாயமோ நடப்பது எதுவுமே கண்ணுக்கு தெரியாது. ஆனால் கண்ணிருந்தும் கபோதியாய் இருப்பவர்கள் எத்தனை பேர்.? அவர்கலைத்தானே நாம் தலைவன் தலைவன் என்று பிதற்றுகிறோம்.