சிறுவர் துஷ்பிரயோகம் – தடுக்கப்பட வேண்டிய ஒன்று

5100218-child-abuse-01-399x600

 

 

 

 

 

 

 

 

 

 

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே அவரைப் பராமரிப்போரால் (பெற்றோர்/ பாதுகாவலர்கள்) ஏற்படுகின்ற பாதிப்பே ஆகும்.

துஷ்பிரயோகத்தின் வகைகள்

பொதுவாக நான்கு வகையான துஷ்பிரயோகங்கள் உய்த்தறியப்பட்டுள்ளன. ஆனால் ஒரு குழந்தை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகலாம்.

உடலியல் துஷ்பிரயோகம்

– அடித்தல்

– தீயால் சுடுதல்

– நஞ்சூட்டல்

– மூச்சுத்திணறலை ஏற்படுத்தல் என்பன அடங்கும்

உளவியல் துஷ்பிரயோகம்

– குழந்தையைப் புறக்கணித்தல்

– உணர்ச்சியை மதிக்காமை

– குழந்தையின் சமூக தொடர்பைத் துண்டித்தல்

– அச்சுறுத்தல் என்பன அடங்கும்

பாலியல் துஷ்பிரயோகம்

– பாலியல் உறவிற்கான தூண்டுதல் மற்றும் வற்புறுத்தல்

– உடலியல் தொடர்பற்ற செயற்பாடுகளான

o ஆபாசப்படங்களைக் காண்பித்தல்

o பொருத்தமற்ற பாலியல் முறைகளை அறிமுகம் செய்தல் என்பன இவற்றுள் அடங்கும்

புறக்கணித்தல்

– குழந்தையின் சுகாதார மற்றும் விருத்திக்குத் தேவையான உடலியல் உளவியல் தேவைகளை பூர்த்தி செய்யாமை.

– அடிப்படை வசதிகளான உணவு உடை உறையுள் என்பன பூர்த்தி செய்யப்படாமை

கருத்துக்கள்

சிறுவர் துஷ்பிரயோகத்தை சந்தேகிப்பதற்கு கீழே கூறப்பட்ட கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன

– சந்தேகிக்கப்படும் அறிகுறிகளாவன

o காயத்தின் தன்மை

o நடத்தை மாற்றங்கள்

– மேலே கூறப்பட்ட அறிவுறுத்தும் தன்மைகளுக்கு தகுந்த விளக்கத்தை அளித்தல்

– துஷ்பிரயோகத்தைப் பற்றி மிகவும் கடுமையான கவனத்தைச் செலுத்துதல்.

பரம்பல்

– 7 வீதமான சிறுவர்கள் உடலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்

– 6 வீதமான சிறுவர்கள் கடுமையான புறக்கணித்தலுக்கு உள்ளாகிறார்கள்

– 6 வீதமான சிறுவர்கள் உளவியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்

– 11 வீதமானோர்கள் உறவினரல்லாத தெரிந்த நபர்களினாலும் 4 வீதமானோர் உறவினர்களாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்