புத்தளம் நகரில் மாபெரும் கல்வி கண்காட்சி ஆரம்பம்

மாபெரும் கல்வி கண்காட்சி இன்று (02-03-2023) புத்தளம் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக நாளையும் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு இரவு 8 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இலக்காகக் கொண்டது.

நுழைவு முற்றிலும் இலவசமான இந்நிகழ்வில் ஏராளமான கண்காட்சியாளர்கள் வருகை தந்துள்ளனர். திரை காட்சிகள் மூலம் பல்வேறு கல்வித் துறைகள் பற்றிய தெளிவு, தொழில் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச செயலகம், PAQ மற்றும் YSF உள்ளிட்ட நலன்புரி அமைப்புகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்ப்பினை நீங்களும் பயன்படுத்துவதோடு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் எத்திவையுங்கள்.

WAK