NIC ஒரு நாள் சேவை
தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை நேற்று முதல் மீண்டும் நாளாந்தம், ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள் கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்திலுள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 10 அலுவலக நாட்களுக்குள், வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் அந்த தினத்தில் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.